இனியவை நாற்பது+

இனித்ததும்…..!இனிக்கப் போவதும்…!

தொகுப்புக்காக ஜூன், 2007

செவிக்கு உணவு..!

உலக இசையின் ஒட்டுமொத்த சுடர்…!
உயிரைப் புதுப்பித்து ஆயுளை நீட்டிக்கும் அமிர்தம்..!
துரு பிடித்த மனங்களைத் துலக்கும் தூய குரல்….!
மரணத்தையும் உயிர்ப்பிக்கும் மாமருந்து…….!
இதோ உங்கள் செவிகளுக்கு…….!

குறை ஒன்றும் இல்லை
ராகம்: ராகமாலிகா
தாளம்:  ஆதீ
கம்போசர்: ராஜாஜி
மொழி: தமிழ்
பல்லவி ஷிவ ரஞ்சனி
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

அனுபல்லவி ஷிவ ரஞ்சனி

கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
சரணம் 1 ஷிவ ரஞ்சனி

வேன்டியதை தந்திட வெங்கடேசன் என்றிருக்க
வேன்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலைஅப்பா கோவிந்தா கோவிந்தா
சரணம் 2 காபி
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா – உன்னை
மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
சரணம் 3 காபி

குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலைஅப்பா கோவிந்தா கோவிந்தா
சரணம் 4 சிந்து பைரவி

கலிநாளுக்கிறங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
சரணம் 5 சிந்து பைரவி

யாதும் மறுக்காத மலையப்பா – உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணை கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலைஅப்பா கோவிந்தா கோவிந்தா…